அவ்னி சினி மேக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ். ரவிக்குமார். ரவி மரியா, படவாகோபி ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘நான் சிரித்தால்’
நாயகன் ஹிப்ஹாப் ஆதி ‘வினோத மனிதர்கள்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொள்கின்றார். ஆதிக்கு எந்த ஒரு சோகமோ, வலியோ எது என்றாலும் உடனே சிரிப்பு வந்துவிடும், இந்த சிரிப்பால் அவர் வேலையை இழக்கிறார். அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த சூழலில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார் ஆதி.
அப்போது அதே ஏரியாவில் இருக்கும் டான் டெல்லி பாபுவை(கே.எஸ்.ரவிகுமார்) கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிடுகின்றனர். இந்த திட்டத்தில் தவறுதலாக ஆதி, ரவிகுமார் இருக்கும் இடத்திற்கு செல்ல, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.
ஹிப்ஹாப் ஆதி வழக்கமான தன் துறுதுறு நடிப்பால் அசத்த, அவருக்கு அப்பாவாக வரும் படவா கோபி லோக்கல் அப்பாவாக இறங்கி அடிக்கின்றார்.நாயகி ஐஸ்வர்யா மேனன் அழகாக வந்து நிற்கிறார். காதல் காட்சிகளாக இருக்கட்டும், ப்ரேக் அப் பாடல் காட்சிகளிலும் இளைஞர்களின் மனதை கொள்ளை கொள்கிறார். அதேபோல் வில்லனாக கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே வில்லன் என்று சொல்லலாம், இதில் ரவிமரியா தான் ஸ்கோர் செய்கின்றார்,
யோகி பாபு வரும் காட்சிகள் பரவாயில்லை. ஆதியும், நண்பர்களும் அடிக்கும் லூட்டியை பார்க்க நன்றாக உள்ளது.
நாயகனாக நடித்திருக்கும் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படி இருக் கின்றன. கதை நகர்வை திறம்பட கையாண்டு இருக்கிறார் அறிமுக இயக்குனர் ராணா.
மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பான திரைப்படம்.
நடிகர்கள் : ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன், கே.எஸ். ரவிக்குமார். ரவி மரியா, படவாகோபி
இசை : ஹிப்ஹாப் ஆதி
இயக்கம் : இராணா
தயாரிப்பு ; அஸ்வினி ஃபிலிம்ஸ்
மக்கள் தொடர்பு ஜான்சன்
Leave a Reply