அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் இயக்குநர் .நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் சமுத்திரக்கனி , ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன், கொற்றவை , அழகன் தமிழ்மணி,விநாயகன், புலிப்பாண்டி ஆகியோர் நடிப்பில் பிப் 27 ஆம் தேதி ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் ’தடயம்’ வெப் சீரிஸ் .
1995 ஆம் ஆண்டு ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்டுகிறார். 1999 ஆம் ஆண்டு தமிழக எல்லை பகுதியில் ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி இருவர் கொலை செய்யப்படுகிறார்கள்.கொலையாளி வேறு எதையும் திருடிச் செல்லாமல் மனைவியின் தாலியையும் கணவனின் அரைஞாண் கயிற்றையும் திருடிச் செல்கிறான்.
இதனையடுத்து இந்த கொலை வழக்கு குறித்து சப் இன்ஸ்பெக்ட்டர் சமுத்திரக்கனி விசாரணையை மேற்கொள்கிறார். அவருக்கு உறுதுணையாக இன்ஸ்பெக்டர் ஷிவதா நாயர் இருக்கிறார். இதே போல அடுத்து ஒரு கணவன் மனைவி கொலை கொலை செய்யப்படுகிறார்கள். தமிழக மற்றும் ஆந்திர எல்லைப் பகுதிகளில் கொலை நடப்பதால் இதை செய்வது யார் என்று தெரியாமல் போலீஸ் திணறுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் இந்த வழக்கு குறித்து விசாரிக்க ஷிவதா மற்றும் சமுத்திரக்கனி ஆந்திரா செல்கிறார்கள். அங்கே சென்ற பின்புதான் இது போல தொடர் கொலைகள் நடந்திருப்பது தெரிய வருகிறது. இப்படி 70 கொலைகள் நடந்திருப்பதும் அது குறித்து எந்த ஒரு தடயமும் கிடைக்காமல் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைகிறார்கள்.
இறுதியில் சமுத்திரக்கனி , ஷிவதா இருவரும் உண்மையான கொலையாளி யார் ? என்பதை கண்டுபிடித்தார்களா?இல்லையா? என்பதே ’தடயம்’ வெப் சீரிஸின் மீதிக்கதை.
எஸ் ஐ அதியமான் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி நேர்மனையான காவல்துறை அதிகாரியாக பொருந்தியிருக்கிறார். வெறும் போலீசாக நடந்துக்கொள்ளாமல் மனசாட்சி உள்ள மனிதராக மனதில் இடம் பிடிக்கிறார்.
இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் ஷிவதா இயல்பான நடிப்பால் கவர்கிறார். திருமண வேலையை விட குற்றவாளியை கண்டுபிடிப்பதே முதல் கடமை என்று இருபப்து பாராட்டுக்குரியது.
கொடூர கொலையாளிகளாக நடித்திருக்கும் ராஜ் திரன் தாஸ், பிரேம் இருவரும் கதாபத்திரத்திக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள். இறுதிக்காட்சியில் இருவரும் அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்து விடுகிறார்கள்.
ஆந்திர அமைச்சரராக வரும் அழகன் தமிழ்மணி, போலீஸ் உயரதிகாரியாக வரும் மூணாறு ரமேஷ், டிரைவராக வரும் புலிப்பாண்டி என படத்தில் நடித்த அனைவரும் கதைக்கு ஏற்ற சரியான தேர்வாக இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் வியின் பாஸ்கர் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. கேகே ஒளிப்பதிவு கதையோடு பயணிக்கு வகையில் இருக்கிறது.
உண்மைச் சம்பவத்தை மைய கருவாக வைத்து திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நவீன் குமார் பழனிவேல் இத்திரைப்படத்தில் அரசியல் மற்றும் அதிகார பலத்தால் பாதிக்கப்படும் சாமானிய மனிதன் எந்த விதத்தில் பாதிக்கப்படுகிறான், என்பதையும் அவனுடைய கோபம் எத்தகையது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
மொத்தத்தில் ’தடயம்’ வெப் சீரிஸ் – தனி மனிதனின் கோபம்
மதிப்பீடு : 4/5
நடிகர்கள் : ஷிவதா , ராஜ் திரன் தாஸ், பிரேம், மூணாறு ரமேஷ், சுந்தர் பாண்டியன்
இசை : வியின் பாஸ்கர்
இயக்கம் : நவீன் குமார் பழனிவேல்
மக்கள் தொடர்பு : சதிஷ் & சிவா (AIM )