இந்த வார இறுதியில் எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியில் வில்லாவில் நுழையும் முன்னாள் காதலர்கள், காதலிகள் நடத்தும் அவர்களது கண்ணீர், நாடகங்களை வேறு நிலையில் கண்டுகளியுங்கள். இந்த வார இறுதியில் நடக்கப் போகும் நிகழ்வுகளை கீழே காணலாம். எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் புதிதாக தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

சூடான ரியாலிட்டி ஷோவான ரசிகர்களுக்கு எப்போது பிடித்த எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவானது தற்போது எம்.டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் ஒளிபரப்பாகி வருகிறது. இளம் பெண்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோவை இந்திய ரசிகர்களின் இதய ராணி சன்னி லியோனும் இதய ராஜா தனுஜ் விர்வானியும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த வார இறுதி எபிசோடில் மாலை நேரத்தில் நட்சத்திரங்களுடன் தொடங்கும் நிகழ்ச்சியானது, திகைப்பூட்டும் உடைகள், அவதூறான வதந்திகள், நாடக நிகழ்ச்சிகளால் உணர்ச்சிக் குவியலான ரோலர் கோஸ்டர் போன்ற உணர்வை பார்வையாளர்களுக்குத் தரும் என்பது நிச்சயம். காஷிஷ் செய்யும் கடந்தகால யுக்திகள் குறித்த தொடர் உரையாடல்கள் சூழ்ச்சியை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அதே நேரத்தில் டாக்டர் அரிகாவைப் பற்றிய அட்டியின் சந்தேகங்கள் விவாதத்துக்கு வழிவகுக்கின்றன. மேலும், சன்னி ஆரக்கிளுக்கு தனது துணையைத் தேர்ந்தெடுத்து அவரை வெளியேற்றுகிறார். இந்த நேரத்தில் ஆதித், மிஸ்சீஃப் (குறும்பு) பெட்டியைத் திறந்ததும், அதிர்ச்சி அலைகள் அரங்கத்தில் உருவாகின்றன. ஆனால் உண்மையான குழப்பம், குறும்புக்காரரான உர்பியின் (Uorfi) வருகையுடன் தொடங்குகிறது. பாதுகாப்பான பக்கத்தில் உள்ள தகுந்த போட்டியாளர்களை அவர் கண்காணிக்கிறார். பின்னர் அவர் கூறும்போது, “இந்தப் பக்கத்தில் எனக்கு சரியான துணை இல்லை என்று தோன்றுகிறது. எனவே உங்கள் பக்கத்துக்கு வந்து குழப்பம் செய்ய விரும்புகிறேன்” என்கிறார்.

இதையடுத்து அனைத்து பாதுகாப்பான போட்டியாளர்களையும் பாதுகாப்பற்ற பக்கத்துக்கு அனுப்பும் குறும்பு அட்டையை எடுத்து விளையாடினார் உர்பி. நாடகம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் எம்டிவி ஸ்ப்ளிட்ஸ்வில்லாவில் இதுவரை இல்லாத மிகப்பெரிய குறும்புகளை கொண்டுவந்தார்.
முன்னாள் காதலர்கள், காதலிகளின் நுழைவின் மூலம் இது வில்லாவைத் தலைகீழாக மாற்றியது. மேலும் மோதல்களின் தொடக்கத்தையும் தூண்டியது. அனைத்து போட்டியாளர்களும் தங்களது காதல் முறிவு மற்றும் அதிர்ச்சிகரமான கடந்த காலங்களைப் பற்றி பேசுவதால், ஸ்ப்ளிட்ஸ்வில்லா மற்றும் எக்ஸ்-ஐல் உள்ளவர்களுக்கு இடையே ஒரு கடுமையான சண்டையாக பதற்றங்கள் அதிகரித்தன.

ஸ்பிளிட்ஸ்வில்லாவில் உள்ள குவிமாடம், பொதுவாக குறும்பு மற்றும் வேடிக்கையின் மையமாக இருக்கும். ஆனால் அது இப்போது தீவிரமான மற்றும் கொதித்தெழுந்த பதட்டங்களுடன் இருக்கிறது. இதுகுறித்து சன்னி உறுதியாக கூறும்போது, “ஸ்பிளிட்ஸ்வில்லா வன்முறையை மன்னிக்கவில்லை, நீங்கள் ஒருவருக்கு எதிராக கையை உயர்த்தினால், நீங்கள் அவர்களின் தனிப்பட்ட இடத்தை மீறுகிறீர்கள். அதாவது எங்கள் விதிகளை மீறுகிறீர்கள் என்று அர்த்தம்” என்றார்.

வார இறுதியில் கண்டுகளியுங்கள் எம் டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ்…!

Leave a Reply

Your email address will not be published.